வரலாற்றில் முதன் முறையாக விமான நிலைய மற்றும் விமான சேவைக் கம்பனி விமான நிலைய தள கையாள்தல்களை ஆரம்பிக்கின்றது (ground handling). அதன் பிரகாரம் இன்று (25) ஆம் திகதி முதல் இரத்மலான விமான நிலைலயத்தில் விமான நிலைய தள கையாள்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது அக் கம்பனியினால் ( ground handling) ஆகும்.
இன்று அதிகாலை 11.45 மணிக்கு மாலைதீவிலிருந்து வருகை தந்த விமானமொன்றுக்கு முதலாவதாக தள கையாள்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக இரத்மலான விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்கள். இதற்கு முன்னர் இரத்மலான விமான நிலையத்தில் நில கையாள்தல் செயற்பாடுகள் ( ground handling) மேற்கொள்ளப்பட்டது சிறி லங்கன் கம்பனியினால் ஆகும். விமான நிலைய மற்றும் விமான சேவை கம்பனிக்குரிய சட்டத்தின் ஊடாக அது தொடர்பாக அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதும் இதுகால வரை அது செயற்படுத்தப்படவில்லை. சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் டீ.வீ. சானக ஆகிய அமைச்சர்களின் தலையீட்டுடன் இரத்மலான விமான நிலையத்தில் தள கையாள்தல் செயற்பாடுகள் விமான நிலைய மற்றும் விமான சேவை கம்பனியால் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இரத்மலான விமான நிலையத்தில் கால அட்டவணையிடப்பட்ட சர்வதேச விமான செயற்பாடுகள் எதிர்வரும் ஞாயிறு முதல் ஆரம்பிக்கப்படுவதுடன் அந்த விமான கையாள்தல் தொடர்பாக நில கையாள்தல் செயற்பாடுகளை மேற்கொள்வது விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் கம்பனியின் ஊடாகவாகும். கொழும்பு மற்றும் மாலைதீவுக்கிடையே இந்தச் செயற்பாடுகள் கால அட்டவணையிடப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. இரத்மலான விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலக் கையாள்தல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது 55 வருடங்களின் பின்னராகும்.
இலங்கைக்கும் நெதர்லாந்துக்குமிடையே இருபக்க விமான போக்குவரத்துச் சேவை உடன்படிக்கையொன்றைச் செய்வதற்குள்ளனர். இரண்டு நாடுகளுக்குமிடையே நேரடி விமான பயணிகள் மற்றும் பொருட்கள் விமானப் பயணங்களை ஆரம்பித்தல் இதன் குறிக்கோளாகும். இதன் ஊடாக இலங்கை மற்றும் நெதர்லாந்துக்குமிடையே சுற்றுலா, கல்வி, வர்த்தக, முதலீடு, விவசாயம் மற்றும் கலாச்சார தொடர்புகள் மேலும் முன்னேற்றம் அடையும் என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
இந்த விமான சேவை உடன்படிக்கையைச் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்ச்சத்தின் செயற்பணி கொள்கை கூற்றுக்கு ஏற்ப பொருளாதார அபிவிருத்தியை இலக்கு வைத்து இந்த உடன்படிக்கைக்கு கையொப்பமிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
1944 ஆம் ஆண்டில் கையொப்பமிட்ட சிகாகோ சமவாயத்திற்கு ஏற்ப இரண்டு நாடுகள் அல்லது பலவற்றுக்கிடையே சர்வதேச வர்த்தக விமான போக்குவரத்துச் சேவைகளை நடாத்திச் செல்வதற்கு விமான போக்குவரத்து சேவை உடன்படிக்கைகளுக்கு முற்படுதல் அத்தியாவசியமாகும். தற்பொழுது சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 193 ஆகும். அந்த நாடுகளுடன் உடன்படிக்கைகளுக்கு முனைவதன் ஊடாக தேவையான சந்தர்ப்பங்களில் விமான சேவை செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இயலும் என அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இலங்கைக்கும் நெதர்லாந்துக்குமிடையே தூதுவராலய தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டது 1951 ஆம் ஆண்டு தொடக்கமாகும். வாரமொன்றுக்கு இலங்கை மற்றும் நெதர்லாந்துக்குமிடையே 14 விமான பயணங்களை செயற்படுத்துவதற்கும் இது தொடர்பாக நடைபெற்ற ஆரம்ப கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கன் விமான போக்குவரத்துக் கம்பனி மற்றும் நெதர்லாந்தின் KLM Royal Dutch விமான சேவையும் இது தொடர்பாக ஈடுபடுத்திக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
-கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா பயணத்தளமாக மேம்படுத்துவதற்கு எமிரேட்ஸ் விமானக் கம்பனி மற்றும் இந்நாட்டின் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றுக்கு கையொப்பமிடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை டுபாயில் அமைந்துள்ள எமிரேட்ஸ் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (04) ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. சுற்றுலா மேம்பாட்டு பணியகம் சார்பாக அதன் தலைவர் கிமாலி பிரணாந்து மற்றும் எமிரேட்ஸ் விமானச் சேவைக் கம்பனியின் மேற்கத்தேய ஆசியா மற்றும் இந்திய சமுத்திர பிராந்திய வர்த்தக செயற்பாடுகள் தொடர்பான சிரேட்ட உப தலைவர் Ahamad Khoory ஆகியோர் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
எமிரேட்ஸ் விமானச் சேவைகள் கம்பனி 30 வருடங்களுக்கு அதிகமான காலம் முதல் இலங்கைக்கு விமானச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அக் கம்பனி இலங்கைக்கு முதலாவதாக விமானப் பயணங்களை ஆரம்பித்தது 1986 ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியாகும். எமிரேட்ஸ் கம்பனி கொவிட் தொற்று நோய்க் கால எல்லையின் போது இலங்கைக்கு விமானப் பயணங்களை மேற்கொண்ட உலகின் முன்னணி விமானக் கம்பனியொன்றாகும். 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து எமிரேட்ஸ் விமான சேவையினால் விமான பயணிகள் 50,000 பேருக்கு அண்மித்த தொகையினர் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், இத்தாலி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்து இந்த விமானப் பயணிகள் வருகை தந்துள்ளனர். வாரமொன்றுக்கு எமிரேட்ஸ் விமானங்கள் 21 தற்பொழுது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருகின்றன. புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்ப எதிர்காலத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் மற்றும் எமிரேட்ஸ் விமானக் கம்பனிக்குமிடையே ஒருங்கிணைந்த மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்று அமுல்படுத்தப்படுகின்றது. சுற்றுலா கண்காட்சிகள், மாநாடு, கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் சுற்றுலா மேம்பாடுகள் போன்றவற்றை இதன் கீழ் ஏற்பாடு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி சர்வதேச விமானக் கம்பனிகளுடன் எதிர்காலத்தில் இலங்கையை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் சந்தர்ப்பத்திற்கு சமூகமளித்த சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த ஆண்டில் சர்வதேச விமானக் கம்பனிகள் பல புதிதாக இலங்கைக்கு விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அது தொடர்பாக உரிய விமானச் சேவைகளுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்கள்.
எமிரேட்ஸ் விமானக் கம்பனியுடன் இவ்வாறு இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளமொன்றாக மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்வதானது இந்நாட்டின் சுற்றுலா கைத்தொழில் துறையில் விசேடமான கட்டமொன்று என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். கொவிட் தொற்று நோயினால் வீழ்ச்சியடைந்த இந்நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலை இயல்பு நிலைக்கு மாற்றியமைக்கும் போது விமானச் சேவைகளின் ஒத்துழைப்பு தேவையானது என்றும் அந்த ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இரத்மலான விமான நிலையத்திலிருந்து கால அட்டவணைப்படி விமான பயணங்களை ஆரம்பிக்கின்ற விமான போக்குவரத்துக் கம்பனிகளுக்கு சலுகை வழங்குவதற்கு அரசு ஆயத்தமாக உள்ளது. அதன் பிரகாரம் அவ் விமானக் கம்பனிகளிலிருந்து அறவிடப்படுகின்ற விமான நிலைய வருகை தீர்வையை 50% ஆல் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு அமுல்படுத்தப்படும். அதற்குரிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சுற்றுலா அமைச்சர் கூறினார்கள்.
55 வருடங்களின் பின்னர் இரத்மலான சர்வதேச விமனா நிலையம் தனது சர்வதேச விமானப் பயணங்களை இம் மாதம் 27 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. மாலைதீவு விமான போக்குவரத்துக் கம்பனி மற்றும் இலங்கை தனியார் விமான போக்குவரத்துக் கம்பனியொன்றான FITS AIR கம்பனி இது தொடர்பாக தற்பொழுது உடன்பாட்டை தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார். இதற்கு முன்னர் இரத்மலான விமான நிலையத்தில் வருகை வரி 2020 ஒற்றோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 % சதவீதத்தால் குறைக்கப்பட்டது. புதிய தீர்மானத்ற்கு ஏற்ப இம் மாதம் 27 ஆம் திகதி முதல் இரத்மலான விமான நிலையத்திலிருந்து கால அட்டவணைப்படியான விமான பயணங்களை ஆரம்பிக்கின்ற விமான கம்பனிகளிடமிருந்து அறவிடப்படும் அமேரிக்க டொலர் 60 ஆன வருகை தீர்வையிலிருந்து அமேரிக்க டொலர் 30 ஐ மாத்திரமே அறவிடப்படும்.
இரத்மலான சர்வதேச விமான நிலையத்தை குறைந்த செலவு விமான பயணங்கள் தொடர்பாக புதிய பிரயாணத் தளமாக பிரபல்யப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான பிரதேச செயற்பாடுகள் தொடர்பாக அந்த விமான நிலையத்தில் உள்ள சாத்தியப்பாட்டை இனங் கண்டுள்ளதாகவும் அது தொடர்பாக சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் கம்பனி தனது நிதியை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதே போன்று இரத்மலான விமான நிலையம் பிராந்திய இடங்களுக்கு சேவை வழங்குகின்ற சர்வதேச விமான நிலையமாக ஆக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் 55 வருடங்களின் பின்னர் மாலைதீவிற்கு நேரடி விமான பயணங்களை ஆரம்பிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுப்பது அதன் பிரகாரமாகும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.
இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன் 1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பிராந்திய சர்வதேச விமான பயணங்கள் அமுல்படுத்தபட்டு வந்தன. மீண்டும் பிராந்திய சர்வதேச விமான நிலையமொன்றாக இரத்மலான விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் அதனை இலங்கையின் பிராந்திய விமான மத்திய நிலையமாக முன்னேற்றப்படும் என சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கொள்கை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவொன்றை அமுல்படுத்துகின்றமையுமாகும்.
தற்பொழுதைய அரசு அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரத்மலான சர்வதேச விமான நிலையத்தை பிரதான துறைகள் 05 இன் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவை மத்திய நிலையமொன்று, களியாட்ட விமானப் பயண மத்திய நிலையமொன்று, விமான பயிற்சி நிலையமொன்றாகவும் அதனை அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக உயர் வருமானம் பெறுகின்ற நபர்களை இலக்கு வைத்து தனியார் விமானங்களை இலங்கைக்கு தருவித்துக் கொள்வதனை ஊக்கப்படுத்துவதற்கும், தனியார் விமானங்கள் தொடர்பாக தொழில்நுட்ப தரிப்பிட சேவைகள் விமான எரிபொருள் நிரப்புதல் போன்ற தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறி லங்கன் விமான பயணிகளுக்கு உள்நாட்டு உணவு வேளையொன்றை வழங்குவதற்கு சிறிலங்கன் விமான சேவைக் கம்பனி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்கே உரிய போசாக்கு நிறைந்த உணவு வேளையொன்றை விமானத்திலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அக் கம்பனி கூறுகின்றது. இந்த உள்நாட்டு உணவு வேளை எதிர்காலத்தில் முறையாக சிறி லங்கன் விமானங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த உணவு வேளையை அறிமுகம் செய்யும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (25) ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் செரன்டிப் மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது பிரதான அதிதியாக பங்கபற்றியது சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்களாகும்.
இந்நாட்டுக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை பற்றிய முதலாவது அனுபவம் கிடைப்பது சிறி லங்கன் விமானத்திலாகும் என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். அதன் போது உள்நாட்டு உணவு வேளையொன்றின் அனுபவத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை சமகாலத்தில் செய்ய வேண்டிய மிக பொருத்தமான செயற்பாடொன்று என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்விற்கு சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, விமனா நிலையம் மற்றும் ஏற்றுமதி திட்டமிடல் வலய இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜனக சிறி சந்திரகுப்த, சிறி லங்கன் கம்பனியின் தலைவர் அசோக்க பதிரண, சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மாதாச, விமான நிலைய விமான சேவைகள் கம்பனியின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி ஆகியோர் பங்குபற்றினர்.

Sri Lanka Tourism, in collaboration with the Embassy of Sri Lanka in the Hague, had the opportunity of showing that it’s a travel destination visiting at least for once in a lifetime, which spread the island destinations ‘uniqueness all across the Eu
Continue Reading
Sri Lanka Tourism successfully participated in the JATA Tourism Expo 2025, an international travel fair held from 25th to 28th September 2025 at the Aichi Sky Expo (Aichi International Exhibition Center) in Nagoya, Japan. As one of Asia’s premier tra
Continue Reading