-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
நாட்டினுள் அமுல்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை உரிய காலத்தில் பூர்த்தி செய்வதற்கு அரசு தனது விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளது என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்தி செயற்திட்டமும் உரிய காலத்தில் நிறைவு செய்யப்படுதல் வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பெகேஜ் ஏ செயற்திட்டத்தின் முன்னேற்றம் பற்றி நேற்று (14) ஆம் திகதி அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பெகேஜ் ஏ செயற்திட்டமாக அறிமுகம் செய்வது கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்யும் செயற்திட்டத்தின் இரண்டாவது கட்டமாகும். அது 2020 ஆம் ஆண்டில் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி செயற்திட்டமாகும். 2014 ஆம் ஆண்டில் அப்போது பதவியில் இருந்த சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதம அமைச்சர் சிங்சோ அபே அவர்களின் தலைமையில் இந்த நிர்மாணிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு 03 வருடங்களினுள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் பெகேஜ் ஏ செயற்திட்டத்தின் நிர்மாண பணிகளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் கைவிட்டிருந்தது. செயற்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டது தற்பொழுதைய அரசு ஆட்ச்சிக்கு வந்த பின்னர் 2020 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 18 ஆம் திகதியாகும். நல்லாட்சி அரசாங்கம் இந்தச் செயற்திட்டத்தை கைவிட்டு 05 வருடங்களின் பின்னராகும்.
இதன் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு வருடத்திற்கு பயணிகளை கையாளும் இயலுமை 15 மில்லியன்கள் வரை அதிகரிக்கும். அதற்காக பிரயாணிகள் டேமினலொன்று நிர்மாணிக்கப்படுவதுடன் உயர்வீதி கட்டமைப்பொன்று, பிரயாணிகள் பாலங்கள், மழை நீரை அகற்றும் தொகுதியொன்று, உயிரியல் வாயுத் திட்டத்துடன் கொம்போஸ்ட் தொகுதியொன்று, 05 மாடிகளைக் கொண்ட வாகன தரிப்பிடமொன்றும் நிர்மாணிக்கப்படுகின்றன. செயற்திட்டம் யப்பான் யென் 41,553,286 (மில்லியன் 41553) மற்றும் ரூபா 35,135,843,333 ( 35,135 மில்லியன்) திரண்ட பெறுமதியைக் கொண்டது.
இந்த செயற்திட்டத்தின் நிர்மாணிப்புக்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக இங்கு நீண்ட நேரம் கவனம் செலுத்திய கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இந்தப் பிரச்சினையை பொதுத் திறைசேரி மற்றும் நிதி அமைச்சிற்கு முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பாக மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சுடன் விசேட கலந்துரையாடலொன்றை எதிர்காலத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கொவிட் தொற்று நோய் காரணமாக இந்நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் மந்தமடையக் கூடாது என்பது அரசின் நிலைப்பாடு என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேலும் சுட்டிக் காட்டினார்கள். அதன் காரணமாக நிர்மாணிப்புக்கள் எக்காரணம் கொண்டும் தாமதமடைவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஒப்பந்தக்கார கம்பனிக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர் தொடர்புடைய பிரச்சினைகளை துரிதமாக இனங்கண்டு அவற்றை தீர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் கம்பனியின் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
இந்தக் கலந்துரையாடலுக்கு இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக, சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, விமான நிலைய மற்றும் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி திட்டமிடல் வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜனக சிறி சந்திரகுப்த, அவ் அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் குணவர்தன, விமான நிலைய மற்றும் விமான சேவை கம்பனியின் உப தலைவர் ரஜீவ சூரிய ஆரச்சி ஆகியோர் உள்ளடங்கலான ஒரு தொகுதியினர் இங்கு ஒன்று கூடியிருந்தனர்.
மத்தளை சர்வதேச விமான நிலையத்தை காத்திரமான விமான நிலையமொன்றாக மாற்றியமைப்பதற்காக அரசு முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை இந்த வருடத்தில் மேலும் விஸ்தரிப்புச் செய்வதாக சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கு உலகின் முன்னணி விமான போக்குவரத்துக் கம்பனிகள் பலவற்றுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த வருடத்தின் போது அந்த விமானக் கம்பனிகள் மத்தளை விமான நிலையத்தில் சர்வதேச போக்குவரத்தை ஆரம்பிக்கும் என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
கடந்த வருடத்தில் மத்தளை ராஜபக்ஷ விமான நிலையத்தில் 32,957 விமானப் பயணிகள் கையாளப்பட்டுள்ளனர். கையாளப்பட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கை 722 ஆகும். அவற்றில் 584 விமான கையாள்கையானது சர்வதேச விமானங்கள் என்பது விசேட அம்சமாகும். மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தில் கடந்த ஒரு வருட காலத்தின் போது உள்நாட்டு விமான கையாள்கைகள் 138 நிகழ்ந்துள்ளது என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். இந்த வருடத்தின் சனவரி 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை 2,919 சுற்றுலாப் பயணிகள் மத்தள விமான நிலையத்திலிருந்து இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக மத்தள விமான நிலைய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதியாகும். இந்த வருடத்தில் 36,137 விமான பயணிகள் கையாளப்பட்டுள்ளதுடன் 1,520 விமாங்களும் கையாளப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் 40,386 விமான பயணிகளின் கையாள்கைகள் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த வருடத்தின் போது கையாளப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 2,924 ஆகும். 2015 நல்லாட்சி அரசாங்கம் ஆட்ச்சிக்கு வந்ததைத் தொடர்ந்து மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் செயற்பாடுகள் குறைக்கப்பட்டதுடன் அங்கு நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். நல்லாட்சி கால எல்லையின் போது மத்தளை சர்வதேச விமான நிலையத்தை பிரபல்யப்படுத்துவதற்கு முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததுடன் அதனை செயலிழக்கச் செய்வதற்கு அந்த அரசு நடவடிக்கை எடுத்தது எனவும் சுட்டிக் காட்டினார்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது சனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த விமான நிலையம் “ வெளிநாட்டு சுற்றுலாத் தளமாக” மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சர்வதேச விமான போக்குவரத்துச் சேவைக் கம்பனிகளை கவர்ந்து கொள்வதற்காக மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய கட்டணங்கள் விடுவிப்புச் செய்யப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக, சர்வதேச விமான போக்குவரத்துக் கம்பனிகளுடன் கலந்துரையாடி அவர்களின் விமான சேவைகளை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வருதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதன் பெறுபேறொன்றாக தற்பொழுது ஸ்கைப், களிவர், உஸ்பகிஸ்தான் விமான சேவை, கடார் எயார் ஏசியா, மாலைதிவைன் விமான சேவை, சலாம் எயார் போன்ற சர்வதேச விமான போக்குவரத்துச் சேவைகள் மத்தளயிலிருந்து தமது விமானப் பயணங்களை மேற்கொள்கின்றன.
மேலும், மத்தளை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசு தமது விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் பிரதான வகை தீர்வை வரியற்ற விற்பனை நிலையங்கள் இரண்டு, தேனீர் விற்பனை நிலையமொன்று, வீட்டு மின் உபகரண விற்பனை நிலையங்கள் இரண்டு, சுற்றுலா சேவை கரும பீடமொன்று, கையடக்க தொலைபேசி தொலைத்தொடர்பு கரும பீடமொன்று மற்றும் வங்கிக் கரும பீடமொன்று என்பன தாபிக்கப்பட்டுள்ளன. எதிர் காலத்தில் விமான கையாள்கைகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து விமான நிலையத்தின் வசதிகளை மேலும் விஸ்தரிப்புச் செய்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் தொடர்பாக புதிய போக்குவரத்து திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம் ஆகும். இந்த செயற்றிட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கட்டம் 1 இன் கீழ் 660 மீற்றர் நீளமான நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இரு வழிப்பாதை எவரிவத்தை சந்தியிலிருந்து முதலீட்டுச் சபை நுழைவு வரை நிர்மாணிக்கபடும். அதன் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. அதே சமயம் எவரிவத்தை சுற்று வட்டப்பாதை சந்தியும் அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டம் 2 இன் கீழ், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தேவையான வடிகால் கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதுடன் முதலீட்டுச் சபை நுழைவாயிலிலிருந்து மினுவங்கொட வரை 1050 மீற்றர் நீளமுள்ள நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இருவழிப்பாதை நிர்மாணிக்கப்படும். இச் செயற்றிட்டத்தின் மொத்தச் செலவு 600 மில்லியன் ரூபா ஆகும். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து வருகைகள் மற்றும் வெளிச்செல்கைகள் தொடர்பாக பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு சோதனையின் பின்னரே விமான நிலையத்திற்குள் நுழைய முடியும் என்பதோடு வருகை மற்றும் வெளியேறும் முனையங்களுக்கு எவ்வாறு பிரவேசிப்பது என்பதற்கான சமிஞ்சை கட்டமைப்புக்களை நிறுவுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் தற்போதுள்ள பயணிகள் முனைய கட்டிடத்தொகுதியை பயணிகளின் வசதிக்காக மீள்கட்டமைப்புச் செய்வதற்கும் புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள்தெரிவித்துள்ளார்கள். விமான நிலையத்தில் பயணிகளை கையாளும் இயலளவு பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வொன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயணிகள் முனைய கட்டிடத்தை குடியகல்வு பகுதியில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக செலவிடப்பட்ட தொகை ரூபா 430 மில்லியன்கள் ஆகும். இச் செயற்றிட்டத்தின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வு பகுதி, மேல்மாடிக்கு மாற்றப்படவுள்ளதுடன், மேலும் 04 குடிவரவு கருமபீடங்கள், மேலும் 05 நுழைவுக் கருமபீடங்கள், இரண்டு எஸ்கலேட்டர்கள், ஒரு லிஃப்ட் மற்றும் ஒரு புதிய படிக்கட்டுத் தொகுதி, மேலதிக இடவசதிகள், உணவகங்கள் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிப்புப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். இந்தச் செயற்றிட்டத்தை இந்த ஆண்டின் போது நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
06 மில்லியனாக இருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளை கையாளும் இயலளவு தற்போது 10 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், விமான நிலைய விரிவாக்கத் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பயணிகளைக் கையாளும் இயலளவு 15 மில்லியனாக அதிகரிக்கும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த காலப்பகுதிக்குள் நிர்மாணிப்புப் பணிகளை முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் கிழக்கு மாகாணத்தின் முழுமையான வசதிகளைக் கொண்ட உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை வழங்குதல் இதன் குறிக்கோளாகும் என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் கம்பனி, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை மற்றும் விமானப் படை என்பவற்றுக்கிடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்றைச் செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த உடன்படிக்கையை தற்பொழுது தயார் செய்து வருகின்றது. சிவில் மற்றும் இராணுவ செயற்பாடுகளுக்கிடையே தெளிவான பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கு இதன் ஊடாக எதிர்பார்க்கின்றது. விமான ஓடு பாதையின் வடக்கு பிரதேசத்திற்கு அருகாமையில் விமானப் பயண கட்டுப்பாட்டுக் கோபுரங்கள் மற்றும் தீயிலிருந்து விடுபட்டுக் கொள்வதற்கான வசதிகளை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான நிலைய வளாகத்தினுள் வர்த்தக முதலீட்டுச் சந்தர்ப்பங்களை இனங் கண்டு கொள்வதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றும் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். விமான போக்குவரத்துத் துறைக்குள் வருகின்ற மற்றும் வராத முதலீட்டுச் சந்தர்ப்பங்களை பற்றி இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கான ஹோட்டல்கள், சுற்றுலாத்துறையில் செயற்படுபவர்களுடன் மட்டக்களப்பு விமான நிலையத்தை மேம்படுத்தும் விசேட செயற்றிட்டமொன்றும் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை, கொவிட் தொற்று நோய் காரணமாக தடைப்பட்ட யாழ்ப்பாணம் – கொழும்பு விமானப் பயணங்களை மீண்டும் துரிதமாக தொடங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் அதனுடன் தொடர்புடைய கம்பனிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் மற்றும் இந்த வருடத்தின் ஆரம்ப காலாண்டின் போது அந்த விமானப் பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இயலுமை கிடைக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தள சர்வதேச விமன நிலையம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் பிரயாணத்தளமாக மேம்படுத்தப்படும். அது தொடர்பாக சர்வதேச விமானக் கம்பனிகள் மற்றும் வியாபார ஜெட் விமானங்களை கவரும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
மத்தள விமனா நிலையம் சர்வதேச விமானங்களை கவர்வதற்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. மத்தள விமான நிலையம் இறக்குமதி வரியான அமேரிக்க டொளர் 60 ஐ இரண்டு வருடங்களுக்கு பெற்றுக் கொள்வதை இடைநிறுத்தியுள்ளதுடன் தரையிறக்கும் மற்றும் தரித்து வைப்பதற்கான கட்டணங்களிலும் விமானக் கம்பனிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. மிகவும் வசதிபடைத்த வியாபார பிரமுகர்களை கவர்வதன் ஊடாக வியாபார ஜெட் விமானங்களை தருவித்துக் கொள்வதற்கு கலந்துரையாடல் சுற்றுக்கள் பல நடாத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தீர்வை வரியற்ற கடைத் தொகுதிகளை நடாத்திச் செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் தொடர்பாடல் சேவைகள் மற்றும் வங்கி கரும பீடங்களையும் பேணிச் செல்வதற்கும் தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு மாலைதீவு, கட்டார், எயார் ஏசியா ஆகிய விமான சேவைகள் நேரடி விமான பயணங்களை மேற்கொள்கின்றன. மேலும் பல சர்வதேச விமான சேவைகள் எதிர்வரும் வருடத்தில் மத்தள புதிய விமான நிலையத்துடன் செயற்படுத்தல்களை ஆரம்பிப்பதற்கு விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. அவர்களுடன் தற்பொழுது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார். சலாம் எயார் விமான கம்பனி தனது சரக்கு கையாள்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் எமிரேட்ஸ் விமானக் கம்பனி மிக அண்மையில் தனது சரக்கு கையாள்கைகளை மத்தள விமான நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், கடற்படை பதவியணி பரிமாற்றம் செய்தல் தொடர்பாக கேந்திர நிலையமாகவும் மத்தள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டார் விமானக் கம்பனி மற்றும் எயார் ஏசியா கம்பனி என்பன தற்பொழுது தமது கையாள்கைகளை மத்தளை விமான நிலையத்துடன் செயற்படுத்துகின்றன. 2020 பெப்புருவரி மாதம் முதல் இந்திய பிராந்தியம் மூடப்பட்டமையின் காரணமாக கடல் பதவியணி பரிமாற்றம் தொடர்பாக இந்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
அதே வேளை மத்தள விமான நிலையத்தில் விமானங்களின் பராமரிப்பு மற்றும் திருத்தம் செய்யும் வசதிகளை தாபிக்கும் பணிகள் தொடர்பாக அரசின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், விசேட முதலீடொன்றின் ஊடாக அல்லது இலங்கைக் கம்பனியுடன் ஒருங்கிணைந்த தொழில்முயற்சியாக அதனை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அது தொடர்பாக மேலும் பல படிமுறைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்தள விமான நிலையம் இந்த ஆண்டின் முதல் 09 மாத காலத்தின் போது 518 விமான பிரயாணங்களை மேற்கொண்டுள்ளன. 27,859 பிரயாணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கையாப்பட்ட விமான சரக்கின் அளவு மெற்றிக் டொன் 21.5 ஆகும். முன்னைய வருடத்தின் முதல் 09 மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பிரயாணிகளின் கையாள்கையில் 52% அதிகரிப்பொன்றாகும். சரக்கு கையாள்கையில் 106% அதிகரிப்பொன்றும் காணப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
Starting its promotional work for 2025, Sri Lanka Tourism Promotion Bureau (SLTPB) added another feather into its cap of endorsements, by being recognized as the most innovative Tourism Board promotion in Outbound Travel Mart (OTM) . In parallel to
Continue ReadingColombo, Sri Lanka – March 10, 2025 – The Sri Lanka Tourism Development Authority (SLTDA) successfully organized an event focused on facilitating investments in the tourism industry. The event which was attended by the Minister of Tourism Hon. Vijith
Continue Reading