இந்த மாதத்திலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் ரஷ்ய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய சுற்றுலா பயணிகள் அக்டோபரில் மொஸ்கோவிலிருந்து கொழும்பு செல்லும் அனைத்து ஸ்ரீலங்கன் விமானங்களிலும் ஆசன முன்பதிவு செய்து வருகின்றனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அறிக்கையின்படி, இந்த விமானங்களுக்கான முன்பதிவு தற்போது நிறைவடைந்து வருகின்றது.

ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாரத்திற்கொருமுறை நேரடி விமானத்தை இயக்குகின்கிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல்.534 மொஸ்கோவிலிருந்து அக்டோபர் 09, அக்டோபர் 16, அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 30 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு பயணிக்கவுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜூலை 31 முதல் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவையைத் ஆரம்பித்தது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை செப்டம்பர் 3 ஆம் திகதி ரஷ்யாவிற்கான ஒரு விஷேட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இது செயல்படுத்தப்பட்டது. கோவிட் தொற்றுநோயால் இலங்கை வெளிநாடுகளில் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்தி, ரஷ்யாவின் மொஸ்கோவில் நடந்த சுற்றுலா கண்காட்சியில் கலந்துகொண்டபோது அதை மீண்டும் தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளூர் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் பல சுற்றுக்களாக விஷேட கலந்துரையாடல்களை நடத்தினார்.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கானதொரு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, ஸ்ரீலங்கன் விமான சேவை 'Bye One Get One’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொள்ள வழிவகுக்கும்.

2019 இலேயே அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். அந்த ஆண்டு இலங்கைக்கு வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 86,000 ஆகும். கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 2020 மார்ச் மாதம் வரை 49,397 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Sri Lanka Positioned as a Premier Purpose-Driven Travel Destination in the UK, 2025

Following the successful completion of Global Bird Fair 2025, Sri Lanka Wildlife Tourism Festival was staged in London from 15th to 17th July, at the Sri Lanka High Commission. The event was co-hosted by the Sri Lanka High Commission in the UK, the S

Continue Reading

Ne-Yo Brings His Biggest Hits to Colombo This December! Colombo prepares for a night of unforgettable music, dance, and celebration as Ne-Yo performs live in Sri Lanka for the very first time.

Colombo, Sri Lanka – August 27, 2025 – Sri Lanka is set to make music history as global R&B sensation Ne-Yo, a three-time Grammy Award winner and renowned songwriter, takes the stage in Colombo for the very first time. On December 28, 2025, t

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

Exit
மாவட்டம்